×

உலக பூமி தினத்தையொட்டி டிசிடபிள்யூ சார்பில் சாகுபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

 

ஆறுமுகநேரி,ஏப்.29: சாகுபுரத்தில் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் உலக பூமி தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நிறுவனத்தின் உதவித்தலைவர் உற்பத்தி சுரேஷ் தலைமையில் அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் டிசிடபிள்யூ நிறுவன வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தொடர்ந்து பேசிய சுற்றுச்சூழல் துணை பொதுமேலாளர் ரவிக்குமார், பூமி தினத்தில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகளால் நிகழும் ஆபத்துகளை பட்டியலிட்டதோடு அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். விழாவில் மூத்த அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறை, சிவல் துறை மற்றும் மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.

 

The post உலக பூமி தினத்தையொட்டி டிசிடபிள்யூ சார்பில் சாகுபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : World Earth Day ,DCW ,Sachupuram ,Arumuganeri ,DCW Company ,Production Suresh ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டுவில் உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி